குவாரி பெர்மிட் பெயர் மாற்றித் தருவதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து வழக்குப்பதிந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
மதுரை கே.கே.நகர் பகுதி மல்லிகை குடியிருப்பைச் சேர்ந்தவர் பொன்படி (48). இவரிடம் பிரேம்குமார் என்பவர் திருவள்ளுவர் மாவட்டத்தில் குவாரிகள் வைத்திருப்பதாகவும், அதை பெயர் மாற்றித்தருவதாகவும் கூறியுள்ளார்.இதையடுத்து பிரேம்குமார் தரப்பினரிடம் 25.3.2013 அன்று ரூ.70 லட்சத்தை பிரேம்குமார் தரப்பினரிடம் கொடுத்துள்ளார். ஆனால், உறுதியளித்தபடி பிரேம்குமார் குவாரி பெர்மிட்டை பெயர் மாற்றித் தனக்குத் தரவில்லை என பிரேம்குமார் புகார் கூறினார். மேலும், இதுதொடர்பாக மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதன்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதன் அடிப்படையில் பிரேம்குமார், ரமாதேவி, பிரதீப், பஞ்சவர்ணம் ஆகிய 4 பேர் மீது மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை இரவு வழக்குப்பதிந்துள்ளதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.